போர் வீரர்கள் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை


போர் வீரர்கள் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
x

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

இந்தநிலையில், குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.


Next Story