ஸ்லோ பாய்சன் கொடுத்து கணவன் கொலை...! மாமியாருக்கு முதலில் கொடுத்து சோதனை செய்த மருமகள்


ஸ்லோ பாய்சன் கொடுத்து கணவன் கொலை...! மாமியாருக்கு முதலில் கொடுத்து சோதனை செய்த மருமகள்
x

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை முன்னதாக தனது மாமியாருக்கு அதை கொடுத்து வேலை செய்கிறதா என்று சோதனை செய்துள்ளது தெரியவந்துள்ளது .

மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கமல்காந்த் (49) இவரது மனைவி காஜல் (44). இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் தலையிட்டு சண்டையை தீர்க்க முயன்றனர் முடியவில்லை. இந்த நிலையில் இறுதியாக, 2021 இல், காஜல் சாண்டாக்ரூஸில் உள்ள தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது மகளுடன் தனியாக வாழத் தொடங்கினார்.

மே 2022 இல், காஜல் மீண்டும் சில நிபந்தனைகளுடன் திரும்பி வர ஒப்புக்கொண்டார். ஜூன் 2022 முதல் கணவன் மனைவியும் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

அப்போது சமையல் செய்வதில் காஜல் கூடுதல் ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் ஜூலை 2022 இல், கமல்காந்தின் தாயார் சரளாதேவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்தார், ஆனால் அவரது மரணத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

இந்த் நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி கமல்காந்துக்கும் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறுதியில் தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் அனுமதிக்கபட்டார்.

அங்கு அவருக்கு பல்வேறு இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது =ரத்தத்தில் ஹெவி மெட்டல் இருப்பது தெரிய வந்தது. அவரது ரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பல உறுப்புகள் செயலிழந்து நிலையில் கமல்காந்த் செப்டம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். அவரது மனைவி காஜல் எந்த வருத்தத்தையும் உணரவில்லை, உண்மையில் அவர் தனது கணவரின் ஜவுளி நிறுவனத்தில் இருந்து இயந்திரங்களை விற்பனை செய்வதிலும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்த புதுப்பிப்புகளைப் பெறுவதிலும் பிசியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இறுதியாக, கமல்காந்த் சகோதரி மூலம் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றப்பிரிவு பிரிவு விசாரணையின் போது காஜல் மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

"குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரின் உணவில் மெல்லக்கொல்லும் சயனைடுகளை கலந்து உள்ளார். இது அவரது மரணத்திற்கு வழிவகுத்து உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஐபிசி பிரிவு 302 (கொலை), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீசார் விசாரணையில் கமல்காந்தின் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கமல்காந்த் - கவிதா வாழ்க்கையில் சண்டை, சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. அதோடு காஜலுக்கு ஹிதேஷ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் உள்ளார்.

இதனால் தனது கணவனை கொலை செய்ய எண்ணிய அவர், தனது ஆண் நண்பருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ம்ஹெவி மெட்டல் கலந்த மருந்தை கனவர்து உணவு, மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்துள்ளார். இப்படி தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை காஜல் வாக்குமூலமாக அளித்துள்ளார். மேலும் கமல்காந்தின் தாயாரும் இதே முறையில் இறந்ததால், அதுவும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது தனது கணவரை எவ்வாறு கொலை செய்வது என்று கூகுளில் தேடி பார்க்கையில், ஈராக்கின் சதாம் உசேன் தன் எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலை செய்தது, டெல்லியைச் சேர்ந்த வருண் அரோரா, தன் மாமியாருக்கும் மைத்துனிக்கும் சிறுகச் சிறுக உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்தது போன்ற கிரைம் செய்திகளை படித்துள்ளனர்.

பின்னர் அதனை வைத்தே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி முதலில் இதனை மாமியாருக்கு கொடுத்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு, தண்ணீரில் விஷத்தைக் கலந்துகொடுத்துள்ளார். அதோடு தினமும் 6-8 முறை தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் போன்றவற்றில் தொடர்ந்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வந்துள்ளார்.

மாமியாருக்கு அது வேலை செய்யவும், அதே பாணியில் கணவருக்கும் கொடுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கவிதா, மற்றும் அவரது காதலன் ஹிதேஷிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story