மூடிகெரே அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது


மூடிகெரே அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

மூடிகெரே அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா காடுமல்லிகை கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக ஆல்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் போலீசார் அந்தப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.75 ஆயிரம் ெராக்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பனகல்லை சோ்ந்த சந்திரகவுடா உள்பட 13 பேர் என்பதும், இதில் சந்திரகவுடா பனகல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அம்டே சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்திரகவுடாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதேபோல சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சுதீப்குமார், முகமது, இக்பால், ரகு உள்பட 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம், 10 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆல்தூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.


Next Story