பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை


பிரவீன் நெட்டார் கொலை வழக்கில்   கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை
x

பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடக்கிறது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளிகளை போலீசார் கைது செய்து மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது வருகிற 23-ந் தேதி வரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் கைதான நவ்பல், சைனுல் அபித், முகமது சையது, அப்துல் பஷீர், ரியாஸ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்துள்ளதாகவும், வருகிற 23-ந் தேதி அவர்களை தங்களது காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story