பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்காக 412 விருதுகள் - ஜனாதிபதி ஒப்புதல்


பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்காக 412 விருதுகள் - ஜனாதிபதி ஒப்புதல்
x

6 கீர்த்தி சக்ரா, 15 சவுரி சக்ரா உள்பட பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்காக 412 விருதுகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல்களுக்கான 412 விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதில் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 4 பேருக்கு இறப்புக்குப்பின் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தவிர 15 சவுரி சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளன. இதிலும் 2 பேருக்கு இறப்புக்குப்பின் வழங்கப்படுகிறது.

இதைப்போல 92 சேவா பதக்கங்கள் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.


Next Story