நாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு


நாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 31 Jan 2024 7:49 AM GMT (Updated: 31 Jan 2024 7:56 AM GMT)

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாஜக அரசின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

ஜனாதிபதி, கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து விரிவாக பேசினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செய்த பணிகளை விளக்கினார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றிருந்தது.

சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதியின் உரை (1 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு) பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

நாளை காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

அதன்பிறகு ஜனாதிபதி உரையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர்களுக்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்.


Next Story