அசாமில் இன்று முதல் 8-ந்தேதி வரை ஜனாதிபதி முர்மு சுற்றுப்பயணம்


அசாமில் இன்று முதல் 8-ந்தேதி வரை ஜனாதிபதி முர்மு சுற்றுப்பயணம்
x

கோப்புப்படம்

அசாமில் 8-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு போர் விமானத்தில் பறக்கிறார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, அசாம் மாநிலத்தில் இன்று முதல் 8-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் 8-ந்தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாடீல் போர் விமானத்தில் பறந்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அசாம் பயணத்தின்போது நாளை (7-ந்தேதி) காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

கவுகாத்தி ஐகோர்ட்டு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா நாளை நடக்கிறது. இதிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த தகவல்களை ஜனாதிபதி மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Next Story