"மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்" - சஞ்சய் ராவத் காட்டம்


மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் - சஞ்சய் ராவத் காட்டம்
x

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மும்பை,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.

மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில். சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்னர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது, "மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரத்தில் சீனாவுக்கு பங்கு உள்ளது. சீனாவுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.


Next Story