குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்த பொடியை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார்


குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்த பொடியை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார்
x

குழந்தை பெறுவதற்காக சாமியார் அறிவுறுத்தியபடி மனித எலும்பால் செய்த பொடியை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார்- கணவர்

புனே

மாராட்டிய மாநிலம் புனேவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்மவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. குழந்தை இல்லாத மருமகளை உள்ளூர் சாமியாரின் அறிவுரைப்படி மனித எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை சாப்பிடும்படி அவரது மாமியார் மற்றும் கணவர் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சிங்காட் போலீஸ் நிலையத்தில் கணவர், மாமியார் மற்றும் சாமியார் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் மாமியார் பாதிக்கப்பட்ட பெண்ணை மராட்டிய கொங்கன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் "அகோரி" பயிற்சியில் ஈடுபட கட்டாயப்படுத்தினர் என கூறி உள்ளார்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம், அதன் பிறகே சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பம், நன்கு படித்தவர்கள், ஆனால் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story