ராஜஸ்தானில் கொடூர சம்பவம்; வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 4-வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!


ராஜஸ்தானில் கொடூர சம்பவம்; வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த  4-வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!
x

சிறுமியை கடத்தி, கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கரவ்லியில் நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமையன்று, பாதிக்கப்பட்ட அந்த மைனர் சிறுமி கரவ்லி மாவட்டத்தில் உள்ள ஹிந்தவுன் பகுதியில் இருக்கும் தனது வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த சிறுமியை கடத்தி, கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், சிறுமியை அவளது வீட்டிற்கு அருகில் விட்டுச் சென்றுவிட்டு தப்பிவிட்டனர். இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களை பிடிக்க கரவ்லியின் ஹிண்டான் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story