நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கடந்த மாதம் 13 ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது. ராகுல் காந்தியின் லண்டன் உரை தொடர்பாக ஆளுங்கட்சியினர் அமளியில் இறங்கியதால் கூட்டத்தொடரின் தொடக்க நாட்களில் இரு அவைகளும் முடங்கின.

அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்டு எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம் பூண்டு வருவதால் அவை முடக்கம் நீடிக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இந்த நிலையில், நாடளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story