மங்களூரு அருகே பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரவுடி படுகொலை


மங்களூரு அருகே பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரவுடி படுகொலை
x

மங்களூரு அருகே பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு;


ரவுடி கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பைக்கம்பாடியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராகவேந்திரா. இவர் அந்தப்பகுதியில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ராஜாவின் பெயர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜா, பைக்கம்பாடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ராஜாவை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுபற்றிய தகவல் தகவல் அறிந்ததும் பனம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா ரவுடியாக வலம் வந்ததால் அவரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வெட்டி கொலை செய்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story