புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்


புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்
x

ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கூறியதாவது:

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன.

ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவசரப்படுவதற்கு எந்த தேவையும் இல்லை" என்றார்.



Next Story