இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு


இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு
x

டெல்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதியில், அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சுனில் அம்பேத்கர் கூறுகையில்,

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகிறார். முன்னதாக நேற்று முஸ்லீம் சமுதாயத்தினரை மோகன் பகவத் சந்தித்தார். டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி , அலிகார் பல்கலை முன்னள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, ராஷ்ட்ரீய லோக்தளம் தேசிய துணைத்தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்டோருடன் நடந்த இந்த சந்திப்பின் போது, மோகன் பகவத் கூறுகையில்,

இந்தியா முன்னேறி செல்கிறது. இந்த நேரத்தில் வெவ்வேறு சமுதாயம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் நட்பு ஏற்படுவது அவசியம் என்றார்.

.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story