ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்


ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்
x
தினத்தந்தி 5 May 2023 5:59 PM IST (Updated: 5 May 2023 6:36 PM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற்றுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்ப பெற்றுள்ளார்.கட்சியினர் பலரும் தனது ராஜினாமா முடிவை வாபஸ் வாங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு தனது ராஜினாமாவை ஏற்க மறுத்தால் முடிவை திரும்ப பெறுவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story