கடன் பத்திரங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.3,717 கோடி திரட்டியது


கடன் பத்திரங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.3,717 கோடி திரட்டியது
x

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3,717 கோடி வருவாய் ஈட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

புதுடெல்லி,

பாரத ஸ்டேட் வங்கி, கடன் பத்திரங்களை (டையர் 1) வெளியிட்டது. இவை 8.25 சதவீத வட்டியுடன் 10 ஆண்டு காலத்துக்கான பத்திரங்கள் ஆகும்.

இந்த பத்திரங்களுக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. அடிப்படை விலையான ரூ.2 ஆயிரம் கோடியை விட 2.27 மடங்கு அதிகமாக ரூ.4 ஆயிரத்து 537 கோடிக்கு கேட்கப்பட்டது. இதன்மூலம், ரூ.3 ஆயிரத்து 717 கோடி வருவாய் ஈட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.


Next Story