போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான இந்தி நடிகருக்கு ஜாமீன்


போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான இந்தி நடிகருக்கு ஜாமீன்
x

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த நிலையில் அந்த ஓட்டலில் மதுவிருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அல்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் ஓட்டலுக்கு சென்ற போலீசார் அங்கு மதுஅருந்திவிட்டு நடனமாடி கொண்டு இருந்த 30 பேரை பிடித்து சென்றனர். மேலும் அந்த ஓட்டலில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். பிடிப்பட்ட 30 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 5 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் 5 பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்களில் ஒருவர் இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் ஆவர். மற்றவர்கள் சித்தாந்த் கபூரின் நண்பர்களான அகில்சோனி, அகில், ஹர்ஷ்வத்சிங், ஹனி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கைதான 5 பேருக்கும் போலீஸ் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story