பீர், நெட்பிளிக்சில் படம், உணவு ஆர்டர்...! ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாப்!


பீர், நெட்பிளிக்சில் படம்,  உணவு ஆர்டர்...! ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாப்!
x

அப்தாப் எதுவும் நடக்காதது போல் மிக இயல்பாக இருக்கிறார் என்று கூறும் காவல்துறையினர், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று கூறுகிறார்கள்.

புதுடெல்லி

அப்தாப் அமீன் - சாரதா இருவரும் டெல்லியில் மெஹ்ரவுளி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.இந்த நிலையில்தான் அமீனை திருமணம் செய்ய சாரதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் வந்த சண்டையில் அமீன் சாரதாவை கொலை செய்துள்ளார். அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து 18 நாட்களுக்கு தினமும் 2 பீஸ்களாக ஆட்டில் அப்புறப்படுத்தி உள்ளார். போலீசார் இவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சாரதாவின் உடல் பாகங்கள் என்று நம்பப்படும் 13 பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இவை தற்போது டிஎன்ஏ அனலைசிஸ் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டிஎன்ஏ ரிசல்ட் வந்த பின்பே இதில் முடிவு தெரிய வரும். இது தொடர்பான விசாரணையின் போலீசாரிடம் முதலில் பேசும் போது அப்தாப் மிகவும் நம்பிக்கையாக பேசி இருக்கிறார். அதாவது தான் கொலையே செய்யவில்லை என்பது போல மிக நம்பிக்கையாக பேசி இருக்கிறார்.

அப்தாப் எதுவும் நடக்காதது போல் மிக இயல்பாக இருக்கிறார் என்று கூறும் காவல்துறையினர், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று கூறுகிறார்கள்.

இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்த பின்னர், சாரதாவின் உடலை 35 துண்டுகளாக அப்தாப் வெட்டியுள்ளான். எப்படி உடலை வெட்ட வேண்டும் என்பை கூகுளில் படித்துத் தெரிந்து கொண்ட அவன், உடலைத் துண்டுகளாக வெட்ட சுமார் 10 மணி நேரம் வரை ஆனதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

பீர் வாங்கி வந்து குடித்துக்கொண்டே உடலை பல துண்டுகளாக வெட்டியிருக்கிறான். அதோடு வெட்டும் போது அடிக்கடி நெட்பிளிக்ஸில் படமும் பார்த்துக்கொண்டே இக்காரியத்தை செய்து உள்ளான்

உடலை துண்டுதுண்டாக வெட்டும் போது அடிக்கடி இடைவெளிவிட்டு அந்த நேரத்தில் பீர் குடிப்பது சிகரெட் புகைப்பது போன்ற வேலையில் ஈடுபட்டான்.

இடை இடையே இடைவெளி விட்டு விட்டு உடல் உறுப்புகளை வெட்டியதால் அதனை 35 துண்டுகளாக வெட்டி முடிக்க 10 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அல்தாப் தெரிவித்துள்ளான்.

ஒவ்வொரு உடல் உறுப்பையும் வெட்டிய பிறகு அதில் ரத்தக்கசிவு இருக்ககூடாது என்பதற்காக நன்றாக கழுவி இருக்கிறான். உடல்களை வெட்டி முடித்த பிறகு தேவையான உணவை ஜொமோட்டோவில் ஆர்டர் செய்து நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளான்" என்றார்.

ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டிய பிறகு எந்த விதமான ரத்தக்கரையும் இருக்கக்கூடாது என்பதற்காக ரசாயான கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்திருந்தான். ஆனாலும் தடயவியல் அதிகாரிகள் கொலை நடந்த வீட்டை முழுமையாக சோதனை செய்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. வீட்டை கழுவவும், உடல்களை சுத்தப்படுத்தவும் அதிகப்படியான தண்ணீரை அல்தாப் பயன்படுத்தி இருக்கிறான்.

அதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான தண்ணீர் பில் வந்துள்ளது. அதிகாரிகளுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சமையல் அறையில் ரத்தக்கரை இருப்பதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அல்தாஃப் வீட்டில் ரம்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல்களை வெட்டுவதற்கு அதனை அல்தாஃப் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வழக்கில் இந்த ரம்பம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அல்தாப் வீட்டை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரி இது குறித்து கூறுகையில், `அல்தாப் வீட்டில் இருந்த அனைத்து ஆதாரங்களை அகற்றிவிட்டான். பிரிட்ஜ் முதல் அனைத்து பகுதியை சுத்தமாக ரசாயானங்களைக் கொண்டு கழுவி இருக்கிறான்.

சமையல் அறையில் மட்டும் ரத்தக்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் சோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என்று தெரிவித்தார். இவ்வழக்கில் இதுவரை போலீசாருக்கு முக்கிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. காட்டில் சில எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. அல்தாப் டெல்லிக்கு வரும் முன்பு ஷ்ரத்தாவுடன் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டிற்கு சென்று இருந்தார். எனவே அல்தாபை அங்கு அழைத்து சென்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர் போலீசார்.


Next Story