அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x

அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகியது. தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் நிலையில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகும் புயல் மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story