பெற்றோரிடம் போனில் பேச அனுமதி மறுத்ததால் மாணவன் தற்கொலை


பெற்றோரிடம் போனில் பேச  அனுமதி மறுத்ததால் மாணவன் தற்கொலை
x

பெற்றோரிடம் போனில் பேச அனுமதி மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டார்

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தலப்பாடி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் பள்ளியில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையைச் சேர்ந்த பூர்வாஜ்(வயது 14) என்ற சிறுவன் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் அவன் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்று கூறி விடுதி கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அவர் அனுமதி வழங்கவில்லை.

இதனால் மனமுடைந்த அவன் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். நேற்று காலையில் தான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபற்றி அறிந்த மாணவனின் பெற்றோர் மங்களூருவுக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


Next Story