டீச்சருடன் தலைமை ஆசிரியர் அட்டாகாசம் ...! வீடியோ எடுத்து மாட்டிவிட்ட மாணவர்கள்


டீச்சருடன் தலைமை ஆசிரியர் அட்டாகாசம் ...! வீடியோ எடுத்து மாட்டிவிட்ட மாணவர்கள்
x

தலைமை ஆசிரியரின் செயல் குறித்து கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.

மசூலிப்பட்டணம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக அதேபகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத் என்பவர் உள்ளார். அவருக்கு 48 வயதாகிறது. இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்த டீச்சருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனந்த்பிரசாத்திற்கும் திருமணமாகிவிட்டது.

இந்த பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் தான்..அதனால், இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. பள்ளி முடிந்ததுமே, அந்த டீச்சரை தன்னுடைய ரூமுக்கு அழைத்து சென்றுவிடுவாராம் ஆனந்த்பிரசாத்..

இருவரும் அடிக்கடி இப்படி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பள்ளிக்கூடம் என்றுகூட பாராமல், இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை, மாணவர்கள் பலமுறை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். முதலில் சில மாணவர்களுக்குதான் தெரிந்துள்ளது. நாளடைவில் மொத்த பள்ளி மாணவர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று சாயங்காலம் வழக்கம்போல், பள்ளி முடிந்ததும், தன்னுடைய ரூமுக்கு டீச்சரை அழைத்து சென்ற, தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார்.இதனை ஒரு மாணவன் ஒளிந்திருந்து செல்போனில் வீடியோவும் எடுத்துவிட்டார். மாணவன் வீடியோ எடுப்பதை, தலைமை ஆசிரியரும், டீச்சரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அந்தரங்கத்தை வீடியோ எடுத்த மாணவனை கூப்பிட்டு, ஆனந்த பிரசாத், பிரம்பால் அடித்து தாக்கி உள்ளார். மாணவனின் செல்போனை பிடுங்கி அதில் இருந்த வீடியோவையும் டெலிட் செய்துள்ளார். அந்த மாணவனை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அந்த மாணவனோ, ஆனந்த பிரசாத் பார்ப்பதற்கு முன்பே அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இந்த வீடியோதான் நேற்று ஒரேநாளில் வைரலானது.

டெலிட் செய்வதற்கு முன்கூட்டியே அந்த மாணவன் நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட விஷயம், ஆனந்த பிரசாத்துக்கு தெரியவந்ததை அடுத்து மீண்டும் ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவனை அழைத்து மறுநாளும் மிரட்டியுள்ளார். அப்போதுதான், மாணவரின் பெற்றோர் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விஷயம் பரவியது.

இதுதொடர்பாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் கதலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத்தை கைது செய்தனர். தலைமை ஆசிரியரின் செயல் குறித்து கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். ஆனந்த்பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.


Next Story