கள்ளக்காதலி வீட்டின் முன்பு வாலிபர் தற்கொலை


கள்ளக்காதலி வீட்டின் முன்பு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:47 PM GMT)

பெங்களூரு அருகே கள்ளக்காதலி வீட்டின் முன்பு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ஒசக்கோட்டை:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே வசித்து வந்தவர் ராஜூ (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூவுக்கும், ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதையடுத்து அந்த பெண் தனது கணவரை பிரிந்து ராஜூவுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ராஜூவுக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜூவை, அவரது கள்ளக்காதலி பிரிந்து சென்றார். இதன்காரணமாக ராஜூ மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலை கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ராஜூ தன்னுடன் வரும்படி கள்ளக்காதலியை அழைத்து உள்ளார். ஆனால் இதற்கு கள்ளக்காதலி மறுத்து விட்டார்.

இதனால் கள்ளக்காதலியின் வீட்டின் முன்பு வைத்து ராஜூ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ஒசக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கள்ளக்காதலி தன்னுடன் வர மறுத்ததால் ராஜூ தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜூவின் மனைவி அளித்த புகாரின்பேரில் ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story