ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை...!


ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை...!
x

ஜம்மு-காஷ்மீரில் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குல்காம் மாவட்டம், பட்போராவில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story