நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!


நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!
x

கோப்புப்படம் 

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது டெல்லியில் தொடங்கியது.

புதுடெல்லி,

நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து அறிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பு கூட்டத்தொடர் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு பிற்பாடு, இது வழக்கமான கூட்டத்தொடர்தான் என்று விளக்கம் அளித்தது.

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த சிறப்பு விவாதம் பிரதானமாக நடைபெறும் என நிகழ்ச்சி நிரல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரையொட்டி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்துகிறது. இதில், இந்த கூட்டத்தொடர் குறித்து விளக்கம் அளித்து, அவர்களின் கருத்துகள் அறியப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


Next Story