காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் - வானிலை மையம் தகவல்


காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் - வானிலை மையம் தகவல்
x

காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இன்று வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 3 நாட்களுக்குள் கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story