கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
x

சிவமொக்காவில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவமொக்கா;


வரதட்சணை கொடுமை

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா பகுதியை சேர்ந்தவர் 25 வயது பெண். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது. தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளார். திருமணத்தின்போது கணவர் குடும்பத்தினருக்கு பெண்ணின் பெற்றோர் வரதட்சணையாக பணம், நகை வழங்கியதாக தெரிகிறது.

ஆனாலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணும், அவரது கணவரும் தனிக்குடித்தனம் சென்றதாக தெரிகிறது. ஆனாலும் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

பலாத்கார முயற்சி

இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றார். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மாமனார், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அவரது பிடியில் இருந்து தப்பிய பெண், இதுகுறித்து சிராளகொப்பா போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், மாமனார், மாமியார் உள்பட 8 பேர் என்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்கள். மேலும் எனது மாமனார் என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், பெண்ணின் மாமனார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story