வரலாற்று நாள் பொன் எழுத்துகளால் எழுதப்படும்; இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டு மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு


வரலாற்று நாள் பொன் எழுத்துகளால் எழுதப்படும்; இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டு மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
x

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டு பேசியுள்ளார்.



போபால்,


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதன்பின் புத்தகங்களை வெளியிட்டு மந்திரி அமித்ஷா பேசும்போது, இந்தியாவின் கல்வி பிரிவில் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். வருகிற நாட்களில் வரலாறு எழுதப்படும்போது, இந்த நாள் பொன்னெழுத்துகளால் எழுதப்படும் என பேசியுள்ளார்.

புதிய கல்வி கொள்கை வழியே, தாய்மொழி வழி மாணவர்களுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இது ஒரு வரலாற்று முடிவு. மோடிஜியின் கீழ், உயர் கல்வியை உங்களது வசதிக்கேற்ப எந்தவொரு மொழியிலும் தற்போது நீங்கள் பெற முடியும் என பேசியுள்ளார்.

இந்த மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர் ஒருவர் கூறும்போது, இது எளிய பணியாக இல்லை. ஆனால், மிக எளிய மொழியில் இதனை நாங்கள் தயாரித்து உள்ளோம். மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவியாக இருக்கும் வகையில் நாங்கள் தயாரித்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.


Next Story