நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்


நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
x

எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு, நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்.

புதுடெல்லி ,

நாடாளுமன்றகுளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு, நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.


Next Story