உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கோபம் சட்டசபையில் மைக்குகளை 'ஆப்' செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்


உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கோபம் சட்டசபையில் மைக்குகளை ஆப் செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்
x

உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளையும் ‘ஆப்' செய்யும்படி அதிகாரிகளுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவா் சித்தராமையா, பல்லாரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மின்தடையால் 3 நோயாளிகள் இறந்தது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். சித்தராமையாவின் பேச்சுக்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆட்சேபனை தெரிவித்தார்.

அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளும் பா.ஜனதா மந்திரிகள் மற்றும் உறுப்பினர்களும் எழுந்து நின்று குரலை உயர்த்தி பேசினர். இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கூச்சலிட்டதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.

சபாநாயகர் காகேரி அனைவரும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் தொடா்ந்து கூச்சலிட்டபடியே இருந்தனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் காகேரி, உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளையும் 'ஆப்' செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளும் 'ஆப்' செய்யப்பட்டன.


Next Story