ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து


ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து
x

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டத்துக்கு வந்த கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியின் பாரம்பரியமான தசரா பொதுக்கூட்டம் வரலாற்றில் முதல் முறையாக 2 இடங்களில் நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பொதுக்கூட்டம் தாதர் சிவாஜி பார்க்கிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டம் பி.கே.சி. மைதானத்திலும் நடந்தது. 2 கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் அந்த கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புனேயில் அவர் கூறுகையில், "முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது.

நான் நாக்பூரில் 'தமாச்சார பிரவர்த்தன் தின்' கொண்டாட்டத்தில் இருந்ததால் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய 2 பேரின் பொதுக்கூட்ட பேச்சையும் கேட்கவில்லை. அதன்பிறகு யூ-டியூப்பில் ஏக்நாத் ஷிண்டே பேச்ைச கேட்டேன். உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன். சிவாஜி பார்க்கைவிட 2 மடங்கு பெரிதான பி.கே.சி. மைதானத்தில் அதிகளவில் மக்கள் திரண்டு இருந்தனர். பி.கே.சி. மைதானம் முழுமையாக நிரம்பி இருந்தது.

ஷிண்டே சேனா தான் உண்மையான சிவசேனா என தொண்டர்கள் நிருபித்து உள்ளனர். அதற்காக நான் அவருக்கு வாழ்த்து கூற விரும்புகிறேன்" என்றார்.


Next Story