3-வது கணவரை... குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்த மனைவி


3-வது கணவரை... குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்த மனைவி
x

கணவர் மொகித்துக்கு சில நாட்களுக்கு முன் கோமல், குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசித்து வருபவர் மொகித் சர்மா. 5 மாதங்களுக்கு முன் கடந்த ஜூனில் கோமல் என்பவருக்கும், மொகித்துக்கும் திருமணம் நடந்தது.

இரண்டு பேரின் வாழ்க்கையும் சீராக சென்று கொண்டிருந்தது. கோமலுக்கு இது 3-வது திருமணம் ஆகும். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கணவர் மொகித்துக்கு கோமல், குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். ஆனால், அதில் விஷம் கலக்கப்பட்டு இருந்துள்ளது.

அதனை அறியாமல் வாங்கி பருகிய மொகித் சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சரிந்து, விழுந்துள்ளார். இதன்பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்பு, சில நாட்கள் கழித்து உடல்நலம் தேறி வந்த அவர், காவல் நிலையத்திற்கு சென்று மனைவிக்கு எதிராக புகார் தெரிவித்து உள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கோமல், இதற்கு முன் கணவரை விட்டு ஏன் பிரிந்து சென்றார்? என்ற காரணம் தெரிய வரவில்லை. இந்நிலையில் 3-வது திருமணம் செய்த கணவரை விஷம் கொடுத்து கொல்ல கோமல் ஏன்? முயற்சித்துள்ளார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story