முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம்;2 மனைவிகளின் தொல்லையால் டிக்டாக் பிரபலம் வீட்டை விட்டு ஓட்டம்...!


முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம்;2 மனைவிகளின் தொல்லையால் டிக்டாக் பிரபலம் வீட்டை விட்டு ஓட்டம்...!
x
தினத்தந்தி 1 Oct 2022 7:05 AM GMT (Updated: 1 Oct 2022 7:07 AM GMT)

முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம் செய்து கொண்ட டிக்டாக் பிரபலம் 2 மனைவிகளின் தொல்லையால் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்தனர்.

சில மாதங்களாக விமலா சோகமாக இருந்து உள்ளார். ஏன் என்று விமலாவிடம் பலமுறை கல்யாண் கேட்டு உள்ளார். அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக கூறினார்.

கல்யாண் திருமணத்திற்கு முன் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார். அப்போது இருவரும் காதலித்து உள்ளனர்.

சில காலம் நன்றாக இருந்த காதல் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று விவரத்தை கூறி உள்ளார். சொன்னாள். கடந்த காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும், அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் கதறி அழுதாள்.

எப்படியும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள். எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது செய்துவைத்தார். கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னின்று கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி...! மூவரும் ஒன்றாக வாழ்கின்றனர்...!

இந்த நிலையில் இந்த திருமணம் முடிந்து 3 பேரும் திடீரென காணாமல் போய்விட்டார்கள்.இவர்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகையாளர்கள் தேடியிருக்கிறார்கள். ஆனால், எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது

தற்போது, நேற்று முன்தினம் கல்யாண் வீட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது. இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கு காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. முதல் மனைவி விமலா ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆனவராம். 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இது அந்த ஊர் பஞ்சாயத்து உட்பட அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள். ஊர் பஞ்சாயத்துக்கு கட்டப்பட்டுத்தான், விமலா, தன்னுடைய கணவருக்கு 2வது திருமணத்தையே செய்து வைத்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கல்யாணிடம் சத்தியம் வாங்கியிருந்த நிலையில், சிக்கலே அந்த சத்தியத்தில்தான் வந்துள்ளது.

நித்யஸ்ரீ வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவருக்கும் விமலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை ஆரம்பித்ததே நித்யஸ்ரீதானாம். விமலாவை அவரது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கல்யாணை இவர் நச்சரித்துள்ளார்.

அதற்கு விமலா, அதெப்படி? 3 பேரும் ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்தாகிவிட்டதே என்று பதிலுக்கு மல்லுக்கட்டினாராம். விமலாவும், நித்யஸ்ரீயும், ஆளுக்கு ஒரு பக்கம் கல்யாணிடம் இது தொடர்பாக சண்டை போட்டதாக தெரிகிறது. இவர்கள் 2 பேரையும் சமாளிக்க முடியாமல், "இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியே போனவர்தானாம். இன்னும் வீட்டுக்கு வரவேயில்லையாம். இப்போது 2 பெண்களும் சேர்ந்து, கல்யாணை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.


Next Story