திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.5 கோடியே 85 லட்சம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.5 கோடியே 85 லட்சம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.5 கோடியே 85 லட்சம் கிடைத்துள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 725 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 172 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 85 லட்சம் கிடைத்தது. இந்த மாதத்தில் அதிக உண்டியல் வருமானம் கிடைத்திருப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story