நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்..!


நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்..!
x

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை (திங்கட்கிழமை) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதில், பொருத்தப்பட்டுள்ள `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.

விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணியளவில் தொடங்கியது.

தொடர்ந்து நாளை காலை 9.10 மணிக்கு கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு விண்ணில் பாய்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.


Next Story