சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் சிக்கமகளூருவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் குவிந்த...

கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டம் என அழைக்கப்படும் சிக்கமகளூரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதால் சிககமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

அதாவது, வியாழக்கிழமை குடியரசு தினம் என்பதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பம், குடும்பமாக வாகனங்களில் சிக்கமகளூருவில் குவிந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இங்கு முல்லையன்கிரி, பாபாபுடன்கிரி மலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான

மக்கள் திரண்டனர். மேலும் ஒன்னமன், கல்லத்தி, ஜெரி அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். கல்லத்தி பகுதியில் உள்ள கோவிலும் மக்கள் வழிபட்டனர். முல்லையன்கிரி மலைப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போலீசார் ேபாக்குவரத்தை சீர் செய்தனர்.

இதேபோல், சிருங்கேரி சாரதம்மா, ஒரநாடு அன்னப்பூர்ணேஸ்வரி அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர். சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Next Story