ஆந்திரா: விஷ வாயு கசிவால் 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி - நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவு


ஆந்திரா: விஷ வாயு கசிவால் 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி - நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவு
x

ஆந்திராவில் விஷ வாயு கசிவால் 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திராவில் அனகாபல்லி மாவட்டத்தில் நேற்று இரவு விஷ வாயுக்களால் 121 பெண்கள் நோய்வாய்ப்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பிராண்டிக்ஸ் செஸ்சில் உள்ள விதைகள் நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுவனத்தை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் அனகாப்பள்ளி என்டிஆர் பகுதி மருத்துவமனைக்கு தொழில்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் இன்று சென்றார். ஊழியர்களின் உடல்நிலை குறித்து டிஎம்எச்ஓ ஹேமந்த் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரவன்குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விதை நிறுவனத்தில் நேற்று மாலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை 121 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே ஆலையில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. மீண்டும் இதே போன்ற அறிகுறிகள் தொழிலாளர்கள் மத்தியில் பதிவாகியதால் அவர்கள் உடனடியாக அனகப்பள்ளியில் உள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, 121 தொழிலாளர்களின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. இதனிடையே இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்தது துரதிர்ஷ்டவசமானது என முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தீவிரமாகக் கவனித்த அவர், உண்மைகள் கண்டறியப்படும் வரை ஆலையை மூட உத்தரவிட்டார். இந்த சம்பவத்திற்கு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story