திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக சவுரவ் கங்குலி நியமனம்


திரிபுரா மாநில சுற்றலாத்துறை  தூதராக சவுரவ் கங்குலி நியமனம்
x

சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.

திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா அறிவித்துள்ளார். இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து முதல் மந்திரி சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில்,

"இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு திரிபுரா சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" கங்குலி ஜியின் பங்கேற்பு நிச்சயமாக மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story