காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இரு வகையானவர்கள் - ஜெய்ராம் ரமேஷ்


காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இரு வகையானவர்கள் - ஜெய்ராம் ரமேஷ்
x

காங்கிரஸ் கட்சியால் அனைத்தையும் பெற்றவர்கள், விசாரணை அமைப்புகளின் நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என இரு வகையானவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு வெளியேறுகின்றனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

'காங்கிரஸ் கட்சியால் அனைத்தையும் பெற்றவர்கள், விசாரணை அமைப்புகளின் நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என இரு வகையானவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு வெளியேறுகின்றனர்.முதல் வகைக்கு மிகச் சிறந்த உதாரணம் குலாம் நபி ஆசாத். இளைஞர் காங்கிரஸ் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர், பொதுச் செயலாளர், மத்திய கேபினெட் மந்திரி என அனைத்தையும் காங்கிரஸ் அவருக்கு அளித்தது.

இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம், தற்போது அசாம் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா. அவர் காங்கிரசில் இருந்த போது அவர் மீது பாஜக நாள்தோறும் குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தார். காங்கிரசில் இருந்து கட்சித் தாவியதும், அவர் மீது குற்றம் சுமத்துவதை பாஜக நிறுத்தி விட்டது. அதோடு அவரை முதல்வராக்கியிருக்கிறது.

கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பாஜகவுக்குத் தாவியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ்,

'காங்கிரஸ் அவர்களை எம்எல்ஏ-க்களாக ஆக்கி இருக்கக் கூடாது. மிகப் பெரிய ஊழல்வாதிகளாகக் குற்றம்சாட்டப்பட்ட அவர்களும் இனி பாஜகவின் வாஷிங்மெஷினில் இருந்து துவைத்து எடுக்கப்பட்டு குற்றமற்றவர்களாகிவிடுவார்கள்' என்றார்.


Next Story