இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்..!


இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்..!
x
தினத்தந்தி 18 Oct 2022 9:28 PM GMT (Updated: 18 Oct 2022 9:29 PM GMT)

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்துள்ளார். மும்பை விமான நிலையம் வந்த குட்டரெஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். அன்டோனியோ குட்டரெஸ் வரும் 21-ம் தேதி வரை இந்தியாவில் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story