வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு


வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு
x
தினத்தந்தி 19 Oct 2022 6:51 PM GMT (Updated: 19 Oct 2022 8:00 PM GMT)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அகமதாபாத்,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையம் வந்த குட்டரெஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அன்டோனியோ குட்டரெஸ் இன்று மும்பை தாஜ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, குஜராத் சென்ற ஐ.நா. சபை பொதுச்செயலாளர் குட்டரெஸ், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story