யூனியன் வங்கியில் டெல்லி நிறுவனம் ரூ.46 கோடி கடன் மோசடி சி.பி.ஐ. வழக்கு

நிறுவனம் கடனை திரும்ப செலுத்தாததால் கடந்த 2013-ம் ஆண்டு, அந்த சொத்தை கையகப்படுத்த வங்கி நடவடிக்கை எடுத்தது.
புதுடெல்லி,
டெல்லியை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஐ.டி. ஹார்டுவேர் விற்பனை நிறுவனம் யூனியன் வங்கியில் இருந்து ரூ.46 கோடி கடன் பெற்றிருந்தது. இதற்காக காசியாபாத்தில் உள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கான பத்திரத்தை கொடுத்திருந்தது.
இந்த நிறுவனம் கடனை திரும்ப செலுத்தாததால் கடந்த 2013-ம் ஆண்டு, அந்த சொத்தை கையகப்படுத்த வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த சொத்து வங்கிக்கு தெரியாமல் ஏற்கனவே விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்படி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் செபா உர்பி, உத்தரவாதம் வழங்கிய ஜாயிப் உன் நிசா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story






