மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது - யோகி ஆதித்யநாத்


மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது - யோகி ஆதித்யநாத்
x

கோப்புப்படம்

மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

மக்களவையில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று சமர்ப்பிக்கப்பட்ட 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட், 'புதிய இந்தியா'வுக்கான தொலைநோக்கு பார்வை, நாட்டின் செழிப்பு மற்றும் 130 கோடி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய மத்திய பட்ஜெட் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட தேசத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றப் போகிறது. இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கான மைல்கல்லாக இந்த பட்ஜெட் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சுதந்திரத்தின் போது முன்வைக்கப்பட்ட 'வளர்ந்த இந்தியா' என்ற தீர்மானத்தை நிறைவேற்றும், 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் நலன் சார்ந்த மத்திய பட்ஜெட்டை நான் வரவேற்கிறேன். பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று கூறியுள்ளார்.


Next Story