அயோத்தி, மதுரா கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை - உ.பி. அரசு


அயோத்தி, மதுரா கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை - உ.பி. அரசு
x
தினத்தந்தி 1 Jun 2022 7:47 AM GMT (Updated: 1 Jun 2022 7:50 AM GMT)

அயோத்தி மற்றும் மதுராவில் உள்ள கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக உத்தரபிரதேச முதல்-மந்திாி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.

லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறைக்கு அம்மாநில முதல்-மந்திாி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினாா். இதனையடுத்து ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் அங்கு பால் தொழிலை செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Next Story