இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்


இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்
x

நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி பொறுப்பு ஏற்கவுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று (11.06.2024) வெளியான அறிவிப்பில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராணுவ நடைமுறைகளின்படி இவர் வரும் 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.


Next Story