"ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு" ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த சுகேஷ்


ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த சுகேஷ்
x

டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

பெங்களூரு தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கியது விசாரணையில் தெரிய வந்ததால் ஜாக்குலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கோர்ட்டில் ஜாக்குலின் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில் போலீசில் ஜாக்குலின் அளித்த வாக்குமூலத்தில் ஜாக்குலின் ''சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி வாழ்க்கையை நரகமாக்கி விட்டார். அவரை உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி என்று சொல்லி என்னை நம்ப வைத்தார். தினமும் மூன்று முறை போன் மற்றும் வீடியோ காலில் பேசிக் கொள்வோம். அவர் சிறையில் இருந்து பேசுவதாக என்னிடம் ஒருமுறை கூட தெரிவிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருப்பதையும் என்னை அவர் ஏமாற்றியதையும் தெரிந்து கொண்டேன். சுகேஷ் என்னை முட்டாள் ஆக்கி விட்டார் என கூறி இருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக சுகேசை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே வெளியே அழைத்துசென்றனர். அப்போது நிருபர்கள் ஜாக்குலின் பற்றிய கேள்விகளை கேட்டனர்.

ஜாக்குலின் தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாக கூறுகிறாரே என ஒரு நிருபர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த சுகேஷ், "நான் அவரைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, அவரிடம் காரணங்கள் உள்ளன, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. "

அப்போது அந்த நிருபர் சுகேஷிடம் ஜாக்குலினை இன்னும் காதலிக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு அவர், "என் முடிவில் இருந்து நான் பின்வாங்கவில்லை அவருக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துகள்" என்று பதிலளித்தார்.




Next Story