பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெங்களூரு: பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு டி.கே.ஹள்ளி, ஹரோஹள்ளியில் உள்ள காவிரி குடிநீர் மையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் 14-ந் தேதி (இன்று), 15-ந் தேதி (நாளை) கம்மனஹள்ளி, ராமய்யா லே-அவுட், லிங்கராஜபுரம், எச்.பி.ஆர். லே-அவுட், எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட், நாகவாரா, ஹெண்ணூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடிநீர் வராது. இதற்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


Next Story