நாங்கள் எந்தவொரு வழிபாட்டிற்கும் எதிரானவா்கள் அல்ல - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்


நாங்கள் எந்தவொரு வழிபாட்டிற்கும் எதிரானவா்கள் அல்ல - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
x

நாங்கள் எந்தவொரு வழிபாட்டிற்கும் எதிரானவா்கள் அல்ல என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தொிவித்து உள்ளாா்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதன் தலைவா் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினாா்.

ஞானவாபி மசூதி வழக்கு குறித்து கூறும்போது, தற்போது ஞானவாபி மசூதி விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. வரலாற்றை நம்மால் மாற்ற முடியாது. அந்த வரலாற்றை நாம் எழுதவில்லை. இந்த பிரச்சனைக்கு தற்போது உள்ள இந்துக்களோ முஸ்லிம்களோ காரணம் அல்ல. இது கடந்த காலத்தில் நடந்தது.

ஞானவாபி மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீா்வு காணவேண்டும். தீா்வு காண முடியாத நிலையில் மக்கள் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். எனவே நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதனை கேள்வி கேட்கக்கூடாது என்றாா்.

ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடி தினமும் ஒரு புதிய சர்ச்சையைத் தொடங்க வேண்டிய அவசியமும் இல்லை. "சண்டையை ஏன் அதிகரிக்க வேண்டும்? ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? என அவா் கேள்வி எழுப்பினாா்.

மேலும் அவா் கூறுகையில், நாங்கள் எந்தவொரு வழிபாட்டிற்கும் எதிரானவா்கள் அல்ல. தற்போது உள்ள முஸ்ஸிம்களின் முன்னோா்கள் இந்துக்கள் தான் என்றாா்.


Next Story