பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 160 வார்டுகளில் வெற்றி பெறுவோம்; மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 160 வார்டுகளில் வெற்றி பெறுவோம்; மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 160 வார்டுகளில் வெற்றி பெறுவோம் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளரும், மந்திரியுமான அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். பா.ஜனதா ஆட்சியின் 3 ஆண்டு சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. அரசின் சாதனைகளை முன்வைத்து பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். இந்த தேர்தலில் பா.ஜனதா 160 வார்டுகளில் வெற்றி பெறும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். வருகிற 11-ந் தேதி கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


Next Story