மேற்கு வங்காளம்: உயர்நிலை பள்ளி மேற்கூரையில் திடீரென்று குண்டு வெடித்ததில் பரபரப்பு


மேற்கு வங்காளம்:  உயர்நிலை பள்ளி மேற்கூரையில் திடீரென்று குண்டு வெடித்ததில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Sep 2022 11:14 AM GMT (Updated: 17 Sep 2022 11:22 AM GMT)

மேற்கு வங்காளத்தில் உயர்நிலை பள்ளியின் மேற்கூரையில் திடீரென்று குண்டு வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டது.


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தீர்த்தாகார் பகுதியில் ப்ரீ இந்தியா என்ற பெயரில் உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில், பள்ளியில் இன்று திடீரென குண்டு ஒன்று வெடித்து உள்ளது.

இதில், பள்ளியின் மேற்கூரை பலத்த சேதமடைந்தது. இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர்களும் மாணவர்களும் சம்பவ பகுதிக்கு சென்றனர். போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். எனினும் இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யாரும் காயம் அடையவில்லை.

இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பள்ளியில் குண்டுவெடிப்பு பற்றிய தகவல் அறிந்து சென்றோம். பள்ளியில் முன்பே குண்டு பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது அந்த சமயத்தில் வீசி எறியப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதா? என விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story