திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது


திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது
x

பெங்களூருவில், திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு பாகலகுண்டே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செயயப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிபேரா (வயது 34), ஜகன்நாத் (48) என்று தெரிந்தது.

இவர்கள் 2 பேரும் பெங்களூரு நகரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடி விற்று வந்தது தெரியவந்தது. 20-க்கும் மேற்பட்ட கார்களில் இருந்து 2 பேரும் திருடியதும் தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story